வன்னிய சொந்தங்கள் அனைவரும் வன்னியர் உலகம் blog ஐ follow செய்யுமாரு கேட்டுக்கொள்கிறோம் New Update: Vanniyar Matrimonial Link Avialable Here

Thursday, August 24, 2023

Congratulations to the 18-year-old Praggnanandhaa runner-up of the 2023 FIDE World Cup!

 

Praggnanandhaa is the runner-up of the 2023 FIDE World Cup! Congratulations to the 18-year-old Indian prodigy on an impressive tournament!



On his way to the final, Praggnanandhaa beat, among others, world #2 Hikaru Nakamura and #3 Fabiano Caruana! By winning the silver medal, Praggnanandhaa also secured a ticket to the #FIDECandidates.

Monday, August 21, 2023

இலக்கியங்களில் வன்னியர்

 

இலக்கியங்களில் வன்னியர்

The Sangam  Literature, "Pathitru Pathu" (பதிற்றுப் பத்து) refers about "Vanniya Mandram" (Kings Burial Place).  During cholas time, the "Kings Burial Place" has been referred as "Palli Padai Koil" :-

"மன்னர் மறைத்த தாழி

வன்னி மன்றத்து விழங்கிய காடே" 

திரிகடுகம், நல்லாதனார், பாடல்-46  says the following :-

"கால் தூய்மை இல்லாக் கலிமாவும் காழ்கடிந்து

மேல் தூய்மை இல்லாத வெங்களிறும் சீறிக்

கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி இம் மூன்றும்

குறுகார் அறிவுடையார்"

 

The Sangam Age Literature "Thirikadugam" refers about "Palli".   The poet compares the Vanniyas "Valours/Powers" at par with "Horses" and "Elephants", which were used in the battle fields.   The poet further says about "Warriors Attitude".  Such "Attitude" (Kshatriyas Attitude) was mandatory in those days to conquer many victories.  During imperial cholas time, we have the names such as "Vettung Kai Azhagiya Kachiyarayar" (வெட்டுங்கை அழகிய கச்சியராயர்),  "Atkolli Kadavarayar" (ஆட்கொல்லி காடவராயர்), "Val Valla Peruman" (வாள் வல்ல பெருமான்) etc.  

மன்னர்கள் தமது முன்னோர்களின் நினைவாக நினைவுச் சின்னங்கள் எழுப்பினர்.  இவற்றில் வழிபாடுகளை கூட அவர்கள் நடத்தினர்.  இத்தகைய நினைவுச் சின்னங்களுக்கு "கோட்டம்" எனவும் "பள்ளி வாயில்" எனவும் பெயர் வழங்கப்பெற்றது :-

"இந்த ஈமப்புறங்காட்டு அரசர்க்கமைந்த ஆயிரம் கோட்டம்"   (மணிமேகலை, வரிகள் - 165 & 166).

"ஓதுக்கின்றிணி புதுப் பூம்பள்ளி

வாயின் மாடந்தொறு மைவிடை விழ்ப்ப

நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே"     (புறம் 33 : 20 -22)

விளக்கம் :  ஒவ்வொரு பள்ளி மாடத்துக்கும் சென்று சோழ மன்னன் நலங்கிள்ளி வழிபாடு செய்தான் என்று புறநானூறு கூறுகிறது.   "பள்ளி மாடம்" என்பது அரச குலத்தோரின் சமாதி.  "பள்ளி" என்ற சொல் அரச குலத்தில் வழங்கப்பட்டு வந்ததை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.    

"வன்னி" எனில் "மன்னன்" :-

 

 

கல்லாடனார் என்ற பழம்பெரும் தமிழ்ப் புலவர் "கல்லாடம்" என்ற அற்புதமான இலக்கியத்தைப் படைத்து  இருக்கிறார்.  திருவள்ளுவரின் காலத்து இலக்கியமாக "கல்லாடம்" கருதப்படுகிறது.  இதில் "அரசன்" என்று குறிப்பிட "வன்னி" என்ற சொல்லையே கல்லாடனார் பயன்படுத்தி இருக்கிறார்.  

"கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற்

றரிதரு குட்டியாய பன்னிரண்டினைச்

செங்கோல் முளையிட் டருணீர் தேக்கிக்

கொலைகள வென்றும் படர்களைக் கட்டுத்

திக்கு படரானை வேலி கோலித்

தருமப் பெரும்பயி ருலகுபெற விளக்கும்

நாற்படை வன்னியராக்கிய பெருமான்" 

விளக்கம் :  பன்னிரண்டு பன்றிக் குட்டிகளை நாற்படை வன்னியராகச் சிவபெருமான் படைத்தார் என்கின்றது கல்லாடம்.  இவ்வுலகில் தருமம் என்னும் பயிர் தழைத்து ஓங்கும் வகையில் நால்வகை சேனைகளுடன் வன்னியர்களை உண்டாக்கிய கடவுள். பன்னிரண்டு பன்றிக் குட்டிகள் என்பது வேளிர்களை குறிப்பதாகும்.

மகாபாரதம், ஆதிபருவம், 169-வது ஸ்லோகத்தில், "யாகசேனர் இயற்றிய வேள்வித்தீயினின்றும் 'திருஷ்டத்யும்மனும்', 'திரௌபதியும்' தோன்றினர்" என்று கூறப்பட்டுள்ளது.    வில்லிபுத்தூரார் மகாபாரதமும், எங்கள் குல திரௌபதியை "வன்னியில் பிறந்த மாமயிலும்" என்று குறிப்பிடுகிறது.       

மகாபாரதம், ஆதிபருவம், காண்டவதகன சர்க்கம் 231-வது அத்தியாயத்தில், மண்டபால மகரிஷி என்பவர் அக்கினியைப் பற்றி கிழ்க்கண்டவாறு புகழ்ந்துள்ளார் :-

"ஓ அக்கினியே  !  நீதான் இரண்டு

அஸ்வினிகளாகவும் இருக்கிறாய் !

நீயே சூரியன்  !  நீயே சந்திரன்  !

நீயே வாயு  ! "

மகாபாரதம், ஆரண்ய பருவம், 220-வது அத்தியாயம், மார்க்கண்டேய சருக்கம், 5-வது ஸ்லோகம் :-

"அக்நிச்சாபி மநுர்நாம ப்ரஜா பத்யமகாரயத்

சம்புமக்நி  மதப் ராஹீ : பிராம்மணா வேதபாரகா : "           

 

 

விளக்கம் :  வேதத்தில் மிகவல்ல  பிராமணர்கள் சம்பு என்ற அக்னி புத்திரனுடைய பிரதாபங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.  

தமிழ் பாகவதம் 8-வது காண்டத்தில் கூறப்பட்டுள்ள செய்தி :-

"இயம்பு இரண்டாம் சீர் மனுவினை உரைக்கின்

இலங்கும் அக்கினி முனம் ஈன்ற

நயம் தரு சுவாரோசி நவன் உலகம்

நவை அறக் காக்கும் நாள்"

விளக்கம் :  அக்கினியின் மகனான ஸ்வரோசி எனப்படும் இரண்டாம் மனு அரசுரிமை பெற்று அரசாட்சி செய்தான்.  இதே விபரம் பாகவதம் (சமஸ்கிருதம்) 8-வது காண்டம், முதல் அத்தியாயம், 20-வது ஸ்லோகத்திலும் கூறப்பட்டுள்ளது. 

"மச்சபுராணத்திலே, 195-வது  அத்தியாயத்திலே, அங்கிரஸுவின் கோத்திரத்திலுதித்த அரசர்களின் சந்ததிகளைக் கூறுமிடத்து அக்கினி என்னும் அரசனைக் கூறி, அதன்பின்னர் பாண்டு என்னும் அரசனையுங் கூறி,  அதன்பின்னர் பாண்டு என்னும் அரசனையுங் கூறப்பட்டிருக்கின்றது. இப்பாண்டுவின் வம்சத்தவரே பாண்டியர் என்பதற்கு வடமொழி இலக்கணஞ் செய்த பாணினி முனிவரும் "பாண்டிய" வென்னும் மொழிக்குக் காரணத்துடன் பகுப்பிலக்கணம் சொல்லி பாண்டியர் பாண்டுவின் வம்சத்தில் வந்தவரென்று கூறியிருக்கின்றனர்.    (Rev. William Tailor, Pandiya History, Second volume).     

----- xx ----- xx ----- xx -----

நன்றி:முரளி நாயக்கர்

Friday, August 18, 2023

கோட்டூர் வன்னியகுல க்ஷத்ரிய சங்கம் - திருமண கலந்துரையாடல்

 

ஒவ்வொரு.வருடமும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நடந்து வரும்,

கோட்டூர் வன்னியகுல க்ஷத்ரிய சங்கம் சார்பாக நடைபெற்ற 17 ஆம்  ஆண்டு திருமண கலந்துரையாடல் மற்றும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற வன்னிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.




 திருமண கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சுமார் 700 மணப்பெண் மணமகன் கலந்துகொண்டு தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர் .




விழாவில் கலந்து கொண்ட வன்னிய சொந்தங்கள் சுமார் 2000 பேருக்கு காலை மற்றும் மத்திய உணவு பரிமாறப்பட்டது . விழாவை சிறப்பாக நடத்திய கோட்டூர் வன்னியகுல ஷத்ரிய சங்கத்திற்கு வன்னிய சொந்தங்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

கோட்டூர் வன்னியகுல க்ஷத்ரிய சங்கம் கோட்டூர்

1 / 3
2 / 3
3 / 3

Vanniyar Matrimory View Site Free Contacts

Tuesday, August 15, 2023

சோழனின் வாரிசுகள்

 

 சோழனின் வாரிசுகள்

சோழர்களின் குல தெய்வக் கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலில் அக் காலத்தில் வன்னிய குல க்ஷத்ரிய அரசர்களான பிச்சாவரம் சோழர்களுக்கு நடைப்பெற்ற முடிசூட்டு விழாவை “வேடிக்கை பார்க்க” மற்றும் “வேலை செய்ய” வந்தவர்களின் வாரிசுகள் தான் இப்போது தங்களை “சோழ மன்னர்களின் வாரிசுகள்” என்று எவ்வித சான்றுகளும் இல்லாமல் பொய் சொல்லுகிறார்கள்.
முடிசூட்டு விழாவின் போது, தில்லை அம்பலத்தின் பொற்கூரையில் இருக்கும் “பஞ்சாட்சரப் படியில்”, தில்லை வாழ் அந்தணர்கள் பிச்சாவரம் சோழ மன்னர்களை அமரவைத்து, எம்பெருமானுக்குஅன்றாடம் செய்யப்பெறும் வலம்புரி சங்கால் “திருஅபிஷேகம்” செய்தபிறகு மந்திரங்கள் எழுதப்பெற்ற பனைஓலையை மன்னருக்கு நெற்றியில் பட்டமாக கட்டுகிறார்கள்.
தில்லை வாழ் அந்தணர்கள் முடிசூட்டு விழாவின் போது, பிச்சாவரம் சோழ அரசர்களுக்கு “வளவன் வாழ்க” என்று “மணிமுடி சூட்டுகிறார்கள்”. அதன் பிறகு புலிக்கொடியை பிச்சாவரம் சோழ மன்னர்களுக்கு கொடுக்கிறார்கள். இத்தகைய “புலி கொடி” தான் உண்மையான சோழர்களின் புலிக்கொடியாகும்.
முடிசூட்டு விழாவின்போது, சோழர்களின் குல மாலையான “ஆத்தி மாலையை” தில்லை வாழ் அந்தணர்கள் பிச்சாவரம் சோழ அரசர்களுக்கு அணிவிக்கிறார்கள்.
முடிசூட்டு விழா முடிந்ததும் “ராஜ கம்பிரத்துடன்” சிதம்பரத்தின் ராஜ வீதிகளில் யானையில் உலா வருகிறார்கள், வன்னிய குல க்ஷத்ரியர்களான பிச்சாவரம் சோழ அரசர்கள்.
முடிசூட்டு விழாவின் போது, தில்லை வாழ் அந்தணர்களிடம் முடியெடுத்து கொடுக்கும் வேலையாட்கள் கூட, இன்று தாங்கள் தான் சோழர்களின் வாரிசுகள் என்று பொய் சொல்கிறார்கள். சோழர்களின் சமூகத்தை சேர்ந்த வன்னியர்கள், அவர்களிடம் சோழர்கள் காலத்தில் வேலை செய்ததாக சிதம்பரம் வரலாற்று கூட்டத்திலேயே எந்த வித சான்றுகளும் இல்லாமல் பொய் சொல்கிறார்கள்.
சோழர்கள் காலம் முதல் இன்று வரை, தங்களது குல தெய்வ கோயிலான தில்லை ஆடல்வல்லான் கோயிலில் “சோழ மன்னர் மண்டகப்படி” செய்யும் சோழ அரசர்களின் வாரிசுகளான பிச்சாவரம் சோழ அரசர்களைப் பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவிப்பவர்களின் மரபினர்கள் தான் இன்று தங்களை தாங்களே சோழர்கள் என்று சொல்கிறார்கள்.
இப்படி இந்த முடிசூட்டு விழா /சோழ மன்னர் மண்டகப்படிகளை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் மற்றும் வேலை செய்ய வந்தவர்களின் வாரிசுகள் தான், இன்று தங்களை தாங்களே சோழர்கள் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
எல்லாம் காலத்தின் கோலமாகும்.

https://vanniyacaste.blogspot.in/

Sunday, August 13, 2023

கம்பர் பார்வையில் வன்னியர்


 

வன்னியர்களின் வீரம் புகழ் பற்றி கம்பர்

 

வன்னியர்களின் வீரம் புகழ் பற்றி கம்பர் எழுதிய சிலை எழுபது நூலில் சில வரிகள்

கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். இந்நூலில் வன்னியர்களின் புகழ், பெருமை, வீரம், கலை, பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள, கம்பர் இந்நூலை எழுதியுள்ளார்.



 

“படைத்துணைத் தலைவர் குலச்சிறப்பு

விடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ

வெனலுடையார், நடையுடையார் மிடியுடைய

நாவலர் மாட்டருள் கொடையார், குடையுடையார்

மலையமன்னர் குன்றவர் பல்லவர் மும்முப்

படையுடையார்வனியர் பிறரென்னுடையார் பகிரிரே”.




Saturday, August 12, 2023

Welcome Vanniyar Sangam Marriage Discussion


 

வன்னியர்கள் யார் ?

 

வன்னியர்கள் யார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்

வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.இவர்கள் முன்னொரு காலத்தில் பள்ளி என்ற பெயரால் அறியப்பட்டனர்.

வன்னியர் சொல்லுக்கான விளக்கம்

வன்னியருக்கான பல சொற்பிறப்பியல் கருத்துகள் உள்ளன, சமசுகிருதத்தில் வன்னி என்னும் சொல்லுக்கு (நெருப்பு/தீ) என்று பொருள்மற்றும் திராவிடத்தில் (வலிமை) என்பதாகும். அதாவது நெருப்பிலிருந்து (அக்னி/தீ) பிறந்தவர் என்று பொருள்படும். பள்ளி என்னும் சொல்லுக்கு சமசுகிருதத்தில் வனம் (காடு) என்பதாகும்.

வன்னி என்னும் பெயரிலிருந்து வன்னியர்கள் தங்கள் சாதி பெயரைப் பெறுகிறார்கள் என்று அல்ஃப் ஹில்ட்பெடில் குறிப்பிடுகிறார்.வன்னி என்ற வார்த்தை சமசுகிருத மொழியில் நெருப்பு என்று கருதப்படுகிறது. ஆனால் தமிழ் மொழியில் இது ஒரு முக்கியமான மரத்தின் பெயராகும். இது முனிவரின் தொடர்பு, மேலும் புராணங்களுடன் தொடர்புகளுக்கு இது வழிவகுக்கிறது

வன்னியர் குல பட்டங்கள்

படையாட்சி, பள்ளி, கவுண்டர், நாயக்கர், சம்புவரையர், காடவராயர், கச்சிராயர், காலிங்கராயர், மழவரையர், உடையார், சோழிங்கர் போன்ற 200க்கும் மேற்பட்ட பட்டங்களை கொண்ட சாதியினர் ஆவார்.

வன்னியர்களின் அடையாளமாக வன்னி மரம் கருதப்படுகிறது.வன்னி மரம் தல விருட்சமாக, தஞ்சை பெரிய கோயிலிலும் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் கோயிலிலும் உள்ளது